Tuesday, March 8, 2011

உலக மகளிர் தினம்

இம்மண்ணில் மனித இனம் தோன்றியது.
இவ்வினம் வளர பெண்ணினம் வேண்டும்.

மண் வளத்தை நினைப்பவர்கள்
வன வளத்தை நினைப்பவர்கள்
பெண் வளத்தையும் நினைக்க வேண்டும்.

பசு பெண் ஈன்றால் முகம் சிரிப்பார்
பெண் பெண் ஈன்றால் முகம் சுளிப்பார்
தன் இனத்தை தானே அழிக்க
நினைப்பதுவும் இவ்வினமே!

நதி ஆனாள்,
காற்று ஆனாள்,
மலை ஆனாள்,
தேசம் ஆனாள்,
தெய்வம் ஆனாள்,
ஆனால் அவளுக்கென்று
ஓர் வரம் கேட்க மறந்தாள்.

வீட்டிலும், நாட்டிலும்,
வெளியிலும், வெய்யிலிலும்
வேளை தவராமல் வேலை.

வேலை முடித்து வந்தாலும்
முடிக்காமல் வந்தாலும்
சமூகம் குத்தும் சொல்லால் வேலை.

ஆத்திரக்காரி, அன்புக்காரி,
அதிகாரக்காரி, அமைதிக்காரி
என்று தூற்றிப் போற்றி
இவ்வினத்தை எது வேண்டுமானாலும் செய்யலாம்.!
இவ்வினத்திற்கு கொண்டாடும் தினம் தான் உலக மகளிர் தினம்.!

No comments:

 
software software